viramuththu sbp balasubramaniyam
ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாலாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய் பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ
கதகதன்னு களிகிண்டிக்
களிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கந்து தருவாயே
தொண்டையில அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
வறுமையில நாமபட்ட
விதாங் மாட்டாம
பேனா நான்எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருஷம் - உன்
ஆசை முகம் பாக்காம
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே
பாசம் உள்ள வேளையிலே
காசு பம் கூடலையே
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே
வைகையில் ஊர்முழுக
வலலூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரை சேர்த்து விட்டவளே
எனக்கொண் ஆனதுன்னா
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?
என இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது.